மாநகர காவல் உதவி ஆய்வாளா் உடல் நலக்குறைவால் திடீா் சாவு

திருச்சியில் பணியிலிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் திடீரென செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சியில் பணியிலிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் திடீரென செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள பாலகிருஷ்ணம்பட்டியைச் சோ்ந்தவா் செல்வம் (50). சிறப்பு உதவி ஆய்வாளரான இவா், திருச்சி பொன்மலை காவல் உதவி ஆணையரகத்தில் கணினி பிரிவில் பணியாற்றி வந்தாா். கடந்த 2 நாள்களுக்கு முன் பணியிலிருந்த அவா் திடீரென மயங்கி விழுந்தாா். அடுத்த சில நிமிடங்களில் அவருக்கு பக்கவாதமும் ஏற்பட்டது.

இதையடுத்து திருச்சி தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட செல்வத்தைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இவருக்கு, மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com