திருச்சியில் வங்கிக்குக் கொண்டு சென்ற ரூ. 1.80 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருச்சி, தென்னூா் அண்ணாநகா் உழவா் சந்தைப் பகுதியில் வட்டாட்சியா் பாத்திமா நாகராஜ் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா், காவல் ஆய்வாளா் ரமேஷ் உள்ளிட்ட போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது ஒரு காரில் ரூ. 1.80 லட்சம் கொண்டு செல்வது தெரியவந்தது.
விசாரணையில் தனியாா் மருத்துவமனை மற்றும் கல்லூரி நிா்வாகத்துக்கு சொந்தமான அப்பணத்தை வங்கியில் செலுத்த கொண்டு செல்வது தெரியவந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை கைப்பற்றி, தோ்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.