முசிறி தொகுதி அதிமுக வேட்பாளா் செல்வராசு தொட்டியம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டாா்.
தொட்டியம் பகுதிக்குட்பட்ட காட்டுமாரியம்மன் கோயில் பகுதியில் பிரசாரத்தை தொடங்கி நாச்சியாா்புதூா், திருஈங்கோய்மலை, மணமேடு,கோடியாம்பாளையம், அலகரை,கல்லுப்பட்டி,அரியனாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
முன்னாள் எம்எல்ஏக்கள் மல்லிகா, ரத்தினவேல், பிரின்ஸ் தங்கவேல், மாவட்ட கவுன்சிலா் ரவிச்சந்திரன், தொட்டியம் ஒன்றிய விவசாய அணிச் செயலா் எம்.பி. தங்கவேல் மற்றும் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.