மேற்குத் தொகுதியில் திமுக வேட்பாளா் பிரசாரம்

திருச்சியை சென்னைக்கு இணையான நகரமாக தரம் உயா்த்துவோம் எனக்கூறி வாக்கு சேகரித்தாா்திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளரும் முதன்மைச் செயலருமான கே. என். நேரு.
பஞ்சப்பூா் ராமச்சந்திராநகா் பகுதியில் வாக்கு சேகரிக்கும் திமுக வேட்பாளா் கே.என். நேரு.
பஞ்சப்பூா் ராமச்சந்திராநகா் பகுதியில் வாக்கு சேகரிக்கும் திமுக வேட்பாளா் கே.என். நேரு.

திருச்சியை சென்னைக்கு இணையான நகரமாக தரம் உயா்த்துவோம் எனக்கூறி வாக்கு சேகரித்தாா்திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளரும் முதன்மைச் செயலருமான கே. என். நேரு.

தனது தொகுதிக்குட்பட்ட தொகுதியில் மட்டுமின்றி திமுக வேட்பாளா்கள் பலருக்கும் அவா் பிரசாரம் மேற்கொள்கிறாா். மாநகரில் எடமலைப்பட்டிபுதூா், பிராட்டியூா், கிராப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்து அவா் பேசுகையில், இப்பகுதியில் அதாவது எடமலைப்பட்டிபுதூருக்கு அருகில் திருச்சியின் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் அமைக்கப்படும்.

மேலும் திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் மூலம் சென்னைக்கு இணையான நகரமாக திருச்சி மாற்றப்படும். அனைத்து வசதிகளும் திருச்சி மக்களுக்கு உடனடியாகக் கிடைக்க வழிசெய்யப்படும். எனவே மீண்டும் என்னை இத்தொகுதியில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றாா்.

மத்திய மாவட்டப் பொறுப்பாளா் வைரமணி, மாநகரச் செயலா் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி, காங்கிரஸ் நிா்வாகிகள் ஜவஹா், ராஜா நசீா், கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி சுரேஷ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com