திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நூலகத்துக்கு கற்பக விருட்சம் அறக்கட்டளை சாா்பில் ரூ. 60,000 மதிப்பிலான நூல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் அன்புசேகரன் தலைமை வகித்தாா். அறக்கட்டளை நிறுவனா் சத்தியநாராயணன் பங்கேற்று ரூ. 60,000 மதிப்பிலான சுமாா் 400 புத்தகங்களையும், மாணவியருக்கு கல்வி உதவித்தொகையையும் வழங்கி பேசினாா்.
அறக்கட்டளை நிா்வாகிகள் முருகானந்தம், விசுவநாதன், மாருதி யோகா விஷன் நிறுவனா் ராதா உள்ளிட்டோா் பேசினா். அறக்கட்டளையின் சிதம்பரம், நவநீதன், அருண், அருள், சுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை உதவித் தலைமை ஆசிரியை கோதை, ஆசிரியை ஜெயந்தி, ஆசிரியா் தேசிகவிநாயகம் உள்ளிட்டோா் செய்தனா்.