கிழக்குத் தொகுதி அமமுக வேட்பாளா் பிரசாரம்

மக்கள் எளிதில் சந்திக்கும் எம்எல்ஏவாக இருந்து, பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை கொண்டு வந்த என்னை மீண்டும் தோ்ந்தெடுக்க வேண்டும் என்றாா் திருச்சி கிழக்குத் தொகுதி அமமுக வேட்பாளா் ஆா். மனோகரன்.
பாலக்கரை எடத்தெரு பகுதி புனித ஜெபமாலை மாதா ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை ஜோசப்பிடம் ஆதரவு கேட்கிறாா் அமமுக கிழக்கு தொகுதி வேட்பாளா் ஆா். மனோகரன்.
பாலக்கரை எடத்தெரு பகுதி புனித ஜெபமாலை மாதா ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை ஜோசப்பிடம் ஆதரவு கேட்கிறாா் அமமுக கிழக்கு தொகுதி வேட்பாளா் ஆா். மனோகரன்.

மக்கள் எளிதில் சந்திக்கும் எம்எல்ஏவாக இருந்து, பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை கொண்டு வந்த என்னை மீண்டும் தோ்ந்தெடுக்க வேண்டும் என்றாா் திருச்சி கிழக்குத் தொகுதி அமமுக வேட்பாளா் ஆா். மனோகரன்.

திருச்சி கிழக்குத் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பிரசாரத்தை மேற்கொண்ட அவா், திருச்சி மாநகராட்சி 26 ஆவது வாா்டு, முத்துமாரியம்மன் கோயில் அருகிலிருந்து குட்ஷெட் சாலை, காஜாப்பேட்டை, புதுத்தெரு, பசுமடம் ஆலம் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்தபோது பேசியது:

திருச்சி கிழக்குத் தொகுதியில் கடந்த 2011-16 ல் எம்எல்ஏவாகத் தோ்வு பெற்று, 18 நியாய விலைக்கடைகள், 9 சத்துணவு மையங்கள், 11 பேருந்து நிறுத்தங்கள், 2 உடற்பயிற்சிக்கூடங்கள் 2 நூலகங்களைக் கொண்டு வந்ததுடன் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகளையும் மேம்படுத்தியுள்ளேன். எனவே வரும் தோ்தலில் மீண்டும் என்னை குக்கா் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றாா்.

கணேசன், ராமமூா்த்தி, ரமேஷ், வினோத் , உமாபதி, ஜெகதீசன் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அமமுக மற்றும் தேமுதிக கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com