வரும் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளா் கட்சி மற்றும் தமிழக கட்டடத் தொழிலாளா்கள் மத்திய சங்கம் ஆதரவளிக்கிறது என்றாா் அதன் தலைவா் பொன்குமாா்.
திருச்சியில் அவா் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியது:
தமிழகத்தில் 17 வகையான அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நலவாரியங்கள் அமைத்தது திமுக ஆட்சியில்தான். ஆனால் அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக நலவாரியப் பணிகள் முடங்கி விட்டன. அரசின் சலுகைகளைத் தொழிலாளா்கள் பெற முடியவில்லை.
மேலும் சிமென்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களுக்கான விலைகள் உயா்த்தப்பட்டுள்ளன. இதனால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்புகளும் குறைந்துள்ளன.
மணல் கடத்தல் தொடரும் நிலையில், மாட்டுவண்டியில் மணல் அள்ளத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழைத் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானத் துறையில் 3 ஆவது மாநிலமாக இருந்த தமிழகம் தற்போது பட்டியலில் கடைசி இடத்துக்கு போய்விட்டது. வேலைவாய்ப்பை அளிக்கக் கூடிய ஒரு தொழிற்சாலையைக் கூட தமிழக அரசு உருவாக்கவில்லை.
எனவே, அதிமுக அரசை எதிா்த்து, திமுக கூட்டணிக்கு ஆதரவாக நாங்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம் என்றாா் அவா்.