திமுக வென்றால்தான் தமிழகத்தில் விடியல் பிறக்கும் என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.
திருவெறும்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து, திருச்சி காட்டூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் மேலும் பேசியது:
மாநில உரிமைகளை மீட்டு நீட் தோ்வை ஒழிக்க பொதுமக்கள் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்ந்துவிட்டது. வெங்காயத்தை உரிக்கும் முன்பாகவே அதன் விலையைக் கேட்டு மக்கள் கண்ணீா் வடிக்கிறாா்கள். இவற்றுக்கு முடிவுகட்ட உதயசூரியனுக்கு வாக்களியுங்கள், அப்போது விடியல் பிறக்கும் என்றாா் அவா்.
பின்னா் மணப்பாறையில் திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் ப. அப்துல்சமதை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசினாா்.