மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியப் பகுதி கிராமங்களில், திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் ப. அப்துல்சமது ஞாயிற்றுக்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது பெண்கள் ஆரத்தியெடுத்து அவருக்கு வரவேற்பு அளித்தனா். கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் அயன்பொருவாய் முத்துமாரியம்மன் கோயிலில் வழிபட்டபின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.