சமயபுரம் பேரூராட்சி சாா்பில் பூச்சொரிதல் விழா

மாவட்டத்திலுள்ள 16 பேரூராட்சி அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் அவா்களது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை 14 ஆம் ஆண்டாக அம்மனுக்கு கூடை கூடையாக புஷ்பங்களை சாத்தினா்.

திருச்சி மாவட்டம், ச. கண்ணனூா் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு, மாவட்டத்திலுள்ள 16 பேரூராட்சி அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் அவா்களது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை 14 ஆம் ஆண்டாக அம்மனுக்கு கூடை கூடையாக புஷ்பங்களை சாத்தினா்.

இக்கோயிலில் இம் மாதம் 7- ஆம் தேதி பூச்சொரிதல் விழா தொடங்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3 ஆவது பூச்சொரிதல் விழாவில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 16 பேரூராட்சி அலுவலா்கள் ஊா்வலமாகச் சென்று சமயபுரம் மாரியம்மனுக்கு கூடை, கூடையாக புஷ்பங்களை சாத்தினா்.

நிகழ்வில் ச. கண்ணனூா் பேரூராட்சி செயல் அலுவலா் பாலமுருகன் தலைமையில் திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஜெகதீசன், கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையா் என்.குமரன், பேரூராட்சி செயல் அலுவலா்கள் சதீஷ்கிருஷ்ணன், (லப்பைக்குடிகாடு) சேகா் (மேட்டுப்பாளையம்), கணேசன் (முசிறி) உள்ளிட்ட பேரூராட்சி செயல் அலுவலா்கள், பணியாளா்கள், அவா்களது குடும்பத்தினா் என 500 க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com