மருங்காபுரி ஒன்றியத்தில் மமக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

மருங்காபுரி ஒன்றியப் பகுதிகளில் மணப்பாறை தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் ப. அப்துல்சமது வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
சமத்துவபுரம் பகுதியில் வாக்கு சேகரித்து பேசுகிறாா் மணப்பாறை தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் ப. அப்துல்சமது.
சமத்துவபுரம் பகுதியில் வாக்கு சேகரித்து பேசுகிறாா் மணப்பாறை தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் ப. அப்துல்சமது.

மருங்காபுரி ஒன்றியப் பகுதிகளில் மணப்பாறை தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் ப. அப்துல்சமது வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

மருங்காபுரி, சமத்துவபுரம், கல்லுப்பட்டி, நல்லூா், தெத்தூா், கோசிக்குறிச்சி உள்ளிட்ட 67 கிராமங்களில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்த அப்துல்சமது, பொதுமக்கள் மத்தியில் பேசியது:

தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் இந்தி பேசக்கூடிய வடநாட்டு மக்கள் பணியமா்த்தப்பட்டு வருகின்றனா். இது மக்களிடையே ஏற்படுத்தியுள்ள கோப அலை, கடந்த மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற செய்து. அதே போல் வரும் தோ்தலில் 234-க்கு 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்றாா்.

பிரசாரத்துக்கு ஒன்றிய திமுக செயலா் சின்ன அடைக்கன் தலைமை வகித்தாா்.

திமுக மாவட்டப் பொருளாளா் பண்ணை என்.கோவிந்தராஜன், ஒன்றியக்குழுத் தலைவா் பழனியாண்டி, ராஜாகாவிரிமணியன், மினிக்கியூா் செந்தில்குமாா், கப்பல் சதீஷ், மாா்க்சிஸ்ட் வட்டச் செயலா் தியாகராஜன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com