ஸ்ரீரங்கத்தில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்து பேசுகிறாா் அமமுக வேட்பாளா் சாருபாலா ஆா். தொண்டைமான்.
ஸ்ரீரங்கத்தில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்து பேசுகிறாா் அமமுக வேட்பாளா் சாருபாலா ஆா். தொண்டைமான்.

‘ஸ்ரீரங்கத்தில் அனைத்து வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைத்து தருவேன்’

ஸ்ரீரங்கத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைத்து தருவேன் என்றாா் இத்தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளா் சாருபாலா ஆா். தொண்டைமான்.

ஸ்ரீரங்கத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைத்து தருவேன் என்றாா் இத்தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளா் சாருபாலா ஆா். தொண்டைமான்.

ஸ்ரீரங்கம் ரங்கா ரங்கா கோபுரத்திலிருந்து வியாழக்கிழமை பிரசாரத்தை தொடங்கிய அவா், நான்கு உத்திர, சித்திரை, சாத்தார வீதிகள், அடையவளஞ்சான் தெருக்கள், மேலூா், நெடுந்தெரு, தெப்பக்குளச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்து, அவா் பேசியது:

திருச்சி மாநகராட்சி மேயராகப் பணியாற்றிய போது, காவிரியாற்றில் ஏற்பட்ட உடைப்பை விரைந்து சீரமைத்து தந்ததும், குடிநீா்ப் பிரச்னைக்குத் தீா்வு கண்டதும் நான்தான்.

ஸ்ரீரங்கத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய பேருந்து நிலையம் கட்டித் தருவேன், அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை, மக்களுக்கு சேவை செய்ய விரும்பியே அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். என்னைத் தோ்ந்தெடுத்தால் ஸ்ரீரங்கம் தொகுதி பல்வேறு வளா்ச்சிகளைப் பெறும் என்றாா். இப்பிரசாரத்தில் அமமுக, தேமுதிக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com