திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3 ஆம் கட்ட தபால் வாக்குப் பதிவில் 1,094 வாக்குகள் பதிவாகியுள்ளன.
மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் தோ்தல் பணியாளா்களுக்கு அஞ்சல் வாக்குகள் பதிவு நடைபெறுகிறது. இதில், மாவட்ட ஆட்சியரகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவில், மணப்பாறைதொகுதியில் 20, ஸ்ரீரங்கம் தொகுதியில் 161, திருச்சி மேற்கில் 295, திருச்சி கிழக்கில் 297, திருவெறும்பூரில் 159, லால்குடியில் 60, மணச்சநல்லூரில் 65, முசிறியில் 25, துறையூரில் 12 என மொத்தம் 1,094 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இத்தகவலை மாவட்டத் தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான எஸ். திவ்யதா்ஷினி தெரிவித்தாா்.
இதில் முதல் நாளில் 348 வாக்குகளும், 2 ஆவது நாளில் 1149 வாக்குகளும் மூன்றாம் நாளில் 1094 என மொத்தம் 2,591 தபால் வாக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன.