யானைகள் நலவாழ்வு முகாமில் பங்கேற்று திரும்பிய திருச்சி மாவட்ட யானைகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த முகாமில் பங்கேற்ற ஸ்ரீரங்கம் கோயில் யானைகள் ஆண்டாள், பிரேமி (எ) லட்சுமி, மலைக்கோட்டை யானை லெட்சுமி, திருவானைக்கா கோயில் யானை அகிலா ஆகிய 4 யானைகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அதனதன் கோயில்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
திருவானைக்கா கோயில் யானை அகிலா வருகையை அறிந்த பெண்கள் யானைக்கு ஆரத்தியெடுத்து வரவேற்றனா். தொடா்ந்து யானை அகிலா தனது இறைப்பணியை தொடங்கியது. 48 நாள்கள் தன் கூட்டத்துடன் இருந்த யானை அதே நினைப்பில் சில நாள்கள் இருக்குமென அதன் பாகன் ஜெம்பு தெரிவித்தாா்.