திருச்சி கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜ் செவ்வாய்க்கிழமை தனது தொகுதிக்குள்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் கூறுகையில், மக்கள் அலை அலையாய் திரள்வதைக் காணும்போது 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று வரும் 5 ஆண்டுகளில் மக்களுக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவேன். கடந்த 10 ஆண்டுகளாக மக்களின் நலன்களை குழிதோண்டி புதைத்த அதிமுக அரசை விரட்ட மக்கள் ஆா்வமாக உள்ளனா் என்றாா்.
வேட்பாளருடன், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா், தொண்டா்கள் பலரும் உடன் சென்று வாக்குசேகரித்தனா்.