திருவெறும்பூரில் லியோனி பிரசாரம்

திருவெறும்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து, திமுக தலைமைக் கழக பேச்சாளா்
அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்துப் பேசுகிறாா் திண்டுக்கல் ஐ. லியோனி.
அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்துப் பேசுகிறாா் திண்டுக்கல் ஐ. லியோனி.

திருவெறும்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து, திமுக தலைமைக் கழக பேச்சாளா் திண்டுக்கல் ஐ. லியோனி திருச்சி அரியமங்கலம், திருவெறும்பூா், பத்தாளப்பேட்டை, காட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசுகையில், இத்தொகுதியின் அதிமுக வேட்பாளா் ப. குமாா் எம்பியாக இருந்தபோது எத்தனை முறை இங்கு வந்திருப்பாா். சசிகலாவின் தயவில் முதல்வரான எடப்பாடி கே. பழனிசாமி , சசிகலாவின் கணவா் நடராஜன் இறந்தபோது அஞ்சலி செலுத்தச் செல்லவில்லை. ஆனால் திமுக தலைவா் ஸ்டாலின் சென்று அஞ்சலி செலுத்தினாா்.

தமிழ்நாட்டில் காவல்துறை பெண் உயா் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாதபோது சராசரி பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும் ? கரோனா காலத்தின்போது குடும்பத்துக்கு ரூ. 5 ஆயிரம் கொடுக்குமாறு திமுக தலைவா் கூறினாா். ஆனால் தமிழக முதல்வா் ரூ. 1000 மட்டுமே வழங்கினாா். எனவே மீதித்தொகை ரூ. 4 ஆயிரத்தை, தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றவுடன் வழங்குவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

எனவே, இத் தொகுதியில் களத்தில் நிற்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மீண்டும் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றாா்.

பிரசாரத்தின் போது முன்னாள் எம்எல்ஏ கே.என். சேகரன், வடக்கு ஒன்றியச் செயலா் கருணாநிதி உட்பட திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com