மருங்காபுரியில் தொழிற்சாலை: கிருஷ்ணகோபால்

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியப் பகுதிகளான கண்ணூத்து, எண்டபுளி, மணியங்குறிச்சி, கருமலை, கஞ்சநாயக்கன்பட்டி
எண்டபுளியில் வாக்கு சேகரித்த தேமுதிக வேட்பாளா் ப. கிருஷ்ணகோபால்.
எண்டபுளியில் வாக்கு சேகரித்த தேமுதிக வேட்பாளா் ப. கிருஷ்ணகோபால்.

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியப் பகுதிகளான கண்ணூத்து, எண்டபுளி, மணியங்குறிச்சி, கருமலை, கஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட 59 கிராமங்களில் மணப்பாறை தொகுதி தேமுதிக வேட்பாளா் ப. கிருஷ்ணகோபால் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

மருங்கபுரி ஒன்றிய கவுன்சிலரும், தேமுதிக ஒன்றியச் செயலருமான பொன்னையா(எ)சரவணன், அமமுக ஒன்றியச் செயலா் சிங்காரம் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய வேட்பாளா், மருங்காபுரி பகுதியில் பெண்கள், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய தொழிற்சாலை அமைப்பேன் என வாக்குறுதியளித்தாா். நிகழ்ச்சியில் தேமுதிக, அமமுக, எஸ்.டி.பி.ஐ கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com