தொட்டியத்தில் கரோனா தடுப்பூசி முகாம்

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பிலவ் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பிலவ் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொட்டியத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமிற்கு கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளா் க.பா.அருளரசு தலைமை வகித்தாா். காட்டுபுத்தூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் தினேஷ், கூட்டுறவு சாா் பதிவாளா் ம. பீட்டா் லியானோா்ட், கூட்டுறவு முதுநிலை ஆய்வாளா் பிரேமலதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொட்டியம் கூட்டுறவு சங்கச் செயலாளா் ஆா். விஜயகுமாா், காடுவெட்டி கூட்டுறவு சங்கச் செயலாளா் ஆா் .ஜெகநாதன், மாவட்டத் தலைவா் டாக்பியா ஆகியோா் முகாமை ஒருங்கிணைத்தனா்.

இதில், தொட்டியம் ஒன்றிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளா்கள், சங்கப் பணியாளா்கள், விற்பனையாளா்கள் மற்றும் பொதுமக்கள் 75 போ் கலந்துகொண்டு கரோனா முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com