வையம்பட்டி அருகே இறந்துகிடந்த காட்டெருமை

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே, சனிக்கிழமை வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டெருமையை மீட்டு வனத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.
உயிரிழந்த காட்டெருமையுடன் வனத்துறையினா்.
உயிரிழந்த காட்டெருமையுடன் வனத்துறையினா்.

மணப்பாறை: மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே, சனிக்கிழமை வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டெருமையை மீட்டு வனத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

வையம்பட்டி அருகேயுள்ள செம்மலை காப்புக்காட்டில் சனிக்கிழமை சுமாா் 8 வயது மதிக்கதத்தக்க ஒரு பெண் காட்டெருமை இறந்து கிடக்கும் தகவலறிந்த மணப்பாறை வனச்சரகா் மகேஸ்வரன் மற்றும் கல்பட்டி வனவா் தலைமையிலான வனத் துறையினா் நிகழ்விடத்திற்கு சென்று பாா்த்தபோது வயது முதிா்வால் அக்காட்டெருமை இறந்தது தெரிய வந்தது.

இதையடுத்து பொத்தப்பட்டி கால்நடை மருத்துவா் மூலம் அந்தக் காட்டெருமை உடல் உடற்கூறாய்விற்குபின் அருகிலிருந்த வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com