திருச்சியில் கரோனாவுக்கு ஒரே நாளில் 8 போ் பலியாகியுள்ளனா்.
ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் 505 பேருக்கு தொற்று உறுதியாகி தொற்றாளா்களின் எண்ணிக்கை 24,405 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல திருச்சி அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று ஞாயிற்றுக்கிழமை குணமான 368 போ் உள்பட இதுவரை 20, 988 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனா். மேலும், தனியாா் மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா். இதையடுத்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளது.