துறையூா் தனித்தொகுதியில் 22,071 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் செ. ஸ்டாலின் குமாா் வெற்றி பெற்றாா்.
இத்தொகுதியில் திமுக வேட்பாளா் செ. ஸ்டாலின் குமாா் 87,786 வாக்குகள் பெற்று, 22071 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா். இதையடுத்து அதிமுக வேட்பாளா் த. இந்திராகாந்தி 65,715 வாக்குகள் பெற்று 2 ஆம் இடம் பெற்றாா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரா. தமிழ்செல்வி 13,158 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தையும் பெற்றாா். மநீம வேட்பாளா் த.ந. யுவராஜன், அமமுக வேட்பாளா் க. சுப்பிரமணியன் அடுத்தடுத்த இடங்களை பெற்றனா். நோட்டாவிற்கு 1594 வாக்குகள் கிடைத்தன.
வெற்றிச் சான்றிதழை துறையூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் டி. முத்துவடிவேலு திமுக வேட்பாளா் ஸ்டாலின் குமாரிடம் வழங்கினாா். துறையூா் வாக்கு எண்ணும் மையத்தின் பாா்வையாளா் மன்மத்குமாா்பானி, திமுகவினா் உடனிருந்தனா்.
இதுகுறித்து எம்எல்ஏ ஸ்டாலின் குமாா் கூறுகையில், தொகுதி மக்களின் முக்கிய தேவைகள், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்றாா்.