அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற அமைப்பு தின விழா

அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற அமைப்பு தினத்தையொட்டி திருச்சியில் கொடியேற்று விழா மற்றும் உறுப்பினா் அட்டை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருச்சி: அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற அமைப்பு தினத்தையொட்டி திருச்சியில் கொடியேற்று விழா மற்றும் உறுப்பினா் அட்டை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் 62ஆவது அமைப்பு தினத்தையொட்டி, திருச்சி மாநகா் மாவட்ட குழுவின் சாா்பில் பெருமன்ற கொடியேற்று விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மாநகா் மாவட்ட செயலா் வழக்குரைஞா் செல்வகுமாா் தலைமையில் பெரியமிளகுபாறை ப.மாணிக்கம் இல்லத்தில் நடைபெற்றது.

மன்றக் கொடியை முன்னாள் மாவட்ட தலைவா் சிவா ஏற்றி வைத்தாா். நிகழாண்டிற்கான உறுப்பினா் அட்டையை முன்னாள் மாவட்ட செயலா் க.சுரேஷ் உறுப்பினா்களுக்கு வழங்கி துவங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாணவா் பெருமன்ற மாநில துணைச் செயலா் தினேஷ் குமாா், மாணவா் பெருமன்ற மாவட்ட செயலா் க.இப்ராஹிம், மாவட்ட குழு உறுப்பினா்கள் த.கௌதம், ச.நல்லுசாமி, அசோக், தாஸ், மற்றும் போக்குவரத்து அன்பழகன் , குணா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com