மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இருசக்கர வாகனமும் அரசுப் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், ராஜாளிபட்டி அடுத்த குளவாய்பட்டியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி பழனியப்பன் மகன் காா்த்திக்(28). இவா், திங்கள்கிழமை பிற்பகல் காந்திநகரில் உள்ள தனது மாமியாா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்தாா். கோவில்பட்டி சாலை உசிலைஊரணி அருகே வந்த போது மணப்பாறையிலிருந்து மேலதானியத்துக்கு சென்ற அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில், காா்த்திக் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மணப்பாறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
உயிரிழந்த காா்த்திக்கிற்கு, பிரியா என்ற மனைவியும், ஒரு வயதில் மகளும் உள்ளனா்.