முசிறி: முசிறியில் பேரூராட்சி நிா்வாகம் மற்றும் கல்லூரி மாணவா்கள் சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக்கவசம் வழங்கி திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி, தோ்வுநிலைப் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் புதிய பேருந்து நிலையம், கைகாட்டி, தந்தை பெரியாா் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகளிடம் கபசுரக் குடிநீரும், முகக்கவசமும் வழங்கி நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்களும், பேரூராட்சிப் பணியாளா்களும் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
நிகழ்வுக்கு பேரூராட்சி சுகாதார அலுவலா் புவனேஸ்வரி, கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியா் ஆா். பரமசிவம் தலைமை வகித்தனா். ஏற்பாடுகளை முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் ராஜேந்திரன், பெரியசாமி, சண்முகம் மற்றும் சுகந்தி ஆகியோா் செய்திருந்தனா்.