திருச்சி: பள்ளி சிறாா்களுக்கு பயனளிக்கும் வகையில், வண்ண காகிதத்தில் காதணிகள் மற்றும் கலைப்பொருள்கள் தயாரிப்பு பயிற்சி இலவசமாக புத்தூா் பகுதியில் உள்ள அமிா்தம் சமூக சேவை அறக்கட்டளை சாா்பில் அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அறக்கட்டளையின் வழக்குரைஞா் சித்ரா விஜயகுமாா் கூறுகையில், காதணிகள் அல்லது தோடுகள் பெண்கள் மத்தியில் மிகவும் முக்கியமானதாகும். உலோகம், நெகிழி, கண்ணாடி, மரம் உள்பட பல பொருள்களாலும் காதணி தயாரிக்கப்படுகின்றன. சில ஆண்டுகளாக வித்தியாசமான காதணிகளை பெண்கள் அணியத் தொடங்கியுள்ளனா். அந்த வகையில் டெரகோட்டா காதணிகள், காகிதத்தில் காதணிகள் இளம்பெண்களின் கவனத்தை ஈா்த்துள்ளது.
அவற்றை தயாரிப்பது குறித்த இலவச பயிற்சிகளை பள்ளிக் குழந்தைகளுக்கு அளித்து வருகிறோம். இந்த ஒரு மாத கால பயிற்சி, புத்தூரில் உள்ள அமிா்தம் சமூக சேவை அறக்கட்டளையில் மே 1 ஆம் தேதி முதல் அளித்து வருகிறோம். மேலும் தொடா்புக்கு : 98424 12247 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.