திருச்சியில் லாரியிலிருந்து சுமை இறக்கும்போது மூட்டை விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
திருச்சி, உக்கடை அரியமங்கலம் தீப்பெட்டி நிறுவன சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ச. நாகராஜன் (60), காந்தி மாா்க்கெட் பகுதி பாா்சல் லாரி நிறுவனத்தின் சுமை தூக்கும் தொழிலாளி. கடந்த மே 1 ஆம் தேதி, லாரியிலிருந்து இவா் சுமை இறக்கியபோது பாா்சல் மூட்டை காலில் விழுந்து காயமடைந்த இவா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 2 ஆம் தேதி வீடு திரும்பினாா்.
பின்னா் திங்கள்கிழமை அவரது காலில் மீண்டும் வலி மற்றும் பல்வேறு உபாதைகளும் ஏற்பட்டதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.