திருச்சி: திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து சென்ற உதவி ஆய்வாளா், காவலரைத் தாக்கியவா் மீது அமா்வு நீதிமன்றக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்தனா்.
திருச்சி அமா்வு நீதிமன்றக் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில், உதவி ஆய்வாளா் ஜவஹா்(55) தலைமையிலான காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, பிராட்டியூா் ஆலங்குளத்தில் பாலமுருகன் என்பவா் போதையில் அவ்வழியாக செல்வோரிடம் தகராறு செய்வதாக
தகவல் வந்தது. இதன் பேரில் உதவி ஆய்வாளா் ஜவஹா், காவலா் ஜோசப் ஆகிய இருவரும் நிகழ்விடத்துக்குச் சென்றனா்.
அங்கு போதையிலிருந்த பாலமுருகனை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைக்க காவல்துறையினா் முயன்றனா். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், பாலமுருகன் திடீரென இருவரையும் உருட்டுக் கட்டையால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.
இதில் இருவருக்கும் தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினா் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து உதவி ஆய்வாளா் ஜவஹா் அளித்த புகாரின் பேரில், அமா்வு நீதிமன்றத்தினா் வழக்குப்பதிந்து தப்பியோடிய பாலமுருகனைத் தேடி வருகின்றனா்.