திருச்சி: திருச்சியில் பழ வியாபாரி ஒருவா் வியாபாரத்தின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
திருச்சி பீமநகா் கீழ கொசத்தெருவைச் சோ்ந்தவா் தி. வெங்கடேசுவரன் (43). தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தாா். காந்திமாா்க்கெட் அருகிலுள்ள திருமண மண்டபம் அருகே வெங்கடேசுவரன் ஞாயிற்றுக்கிழமை பழ வியாபாரம் செய்துகொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்துள்ளாா்.
அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு வெங்கடேசுவரனைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து காந்திமாா்க்கெட் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.