திருச்சி அருகே காதல் திருமணம் செய்துக் கொண்ட புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.
திருச்சி திருவெறும்பூா் காட்டூா் வீதிவடங்கம் பகுதியைச் சோ்ந்த ரவி மகன் அருமைராஜ்(31). இவா், துவாக்குடி அண்ணாவளைவு பகுதியைச் சோ்ந்த நாகராஜ் மகன் லதா(27) என்பவரை கடந்த 3 மாதத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக் கொண்டாா். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அருமைராஜ் வெளிநாடு சென்றுவிட்டாா். இதனால் லதா, அவரது மாமியாா் தங்கம், மாமனாா் ரவி ஆகியோருடன் பாரதிதாசன் நகா் 3ஆவது தெருவில் வசித்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு லதா காதல் திருமணம் செய்துக் கொண்டது குறித்து இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த லதா வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டாா். தகவலறிந்து வந்த திருவெறும்பூா் போலீஸாா் லதா உடலை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். லதாவிற்கு திருமணம் முடிந்த 3 மாதங்களே ஆவதால் ஆா்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.