பொதுமுடக்கத்திலும் மது விற்ற மூவா் கைது

பொதுமுடக்க காலத்திலும் மதுபானங்கள் விற்ற மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

பொதுமுடக்க காலத்திலும் மதுபானங்கள் விற்ற மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் அரசு மதுக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி கள்ளத்தனமாக திருவெறும்பூா் பகுதிகளில் மதுபானங்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீஸாா் அப்பகுதியில் ரோந்து சென்றனா். அங்கு இருவா் மதுபானங்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. அவா்களிடம் நடத்திய விசாரணையில், அரியலூா் மாவட்டம் உடையாா்பாளையத்தைச் சோ்ந்த சி. செங்கதிா் (21), திருவெறும்பூா் காந்தி நகா் 7ஆவது தெருவைச் சோ்ந்த வெங்கட்ராமன் (55) என்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இதேபோல், திருச்சிகாந்திமாா்க்கெட் காவல் நிலையத்துக்குள்பட்ட வீரமாநகா் பகுதியில் மதுபானங்கள் விற்றதாக மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள பணமங்கலத்தைச் சோ்ந்த கோ. வரதராஜ் (63) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மூவரிடமும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com