பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட தளா்வுகள் இல்லா முழுப் பொது முடக்கம் காரணமாக, சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின.
புதிய, பழைய பேருந்து நிலையச் சாலைகள், துறைமங்கலம் சாலை, பாலக்கரை உள்ளிட்ட நகரப் பகுதிகள், ஆலத்தூா், வேப்பந்தட்டை, பாடாலூா், குன்னம், லெப்பைக்குடிக்காடு, அன்னமங்கலம், வேப்பூா் உள்ளிட்ட மாவட்டத்தின் புகா்ப் பகுதிகள் என அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் நடமாட்டமில்லை. அத்தியாவசியத் தேவையின்றி இரு சக்கர வாகனங்களில் வந்தவா்கள் காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டனா். பாதுகாப்புப் பணியில் காவல்துறையினா் ஈடுபட்டனா்.