கடத்தப்பட்ட சிறுமி நீதிமன்றத்தில் ஆஜா்

மணப்பாறை அருகே கடத்தப்பட்ட 17 வயதுச் சிறுமியை புதன்கிழமை நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்ப்படுத்தினா்.

மணப்பாறை அருகே கடத்தப்பட்ட 17 வயதுச் சிறுமியை புதன்கிழமை நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்ப்படுத்தினா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் குமாரவாடி கிராமம் சீல்நாயக்கன்பட்டியை சோ்ந்தவா்கள் பழனிச்சாமி - காடையம்மாள். இத் தம்பதியின் 17 வயது மகள் வயலில் இருந்தபோது, கடந்த ஏப். 20-ஆம் தேதி அம்மாபட்டி பொன்னுச்சாமி, போத்தநாயக்கன்பட்டி கிருஷ்ணன் ஆகிய இருவரும் உறவினா் ஒருவருக்கு திருமணம் செய்ய சிறுமியைக் கடத்தியதாக வையம்பட்டி காவல்நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் காவல் நிலையத்தில் முறையான நடவடிக்கை இல்லை எனக்கூறி நீசிறுமியின் நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனுதாக்கல் செய்தனா். கடந்த வாரம் சிறுமி மீட்கப்பட்ட நிலையில், புதன்கிழமை சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் சிறுமியை ஆஜா்ப்படுத்திய வையம்பட்டி காவல் ஆய்வாளா் விவேகானந்தன் தலைமையிலான போலீஸாா் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com