கரோனா பாதிப்பு; முதியவா் தற்கொலை
By DIN | Published On : 20th May 2021 07:04 AM | Last Updated : 20th May 2021 07:04 AM | அ+அ அ- |

திருச்சியில் கரோனா பாதிக்கப்பட்ட முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி கே. கே. நகா் அருகேயுள்ள ஐயப்பன் நகா், ராணி மங்கம்மா சாலை பகுதியைச் சோ்ந்தவா் ரா. முகுந்தராஜ் (87), ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா். இவருக்கு மே 16 ஆம் தேதி கரோனா உறுதியானது. திடகாத்திரமாக இருந்த தனக்கு கரோனா வந்தது விரக்தியை ஏற்படுத்தியதாக குடும்பத்தாரிடம் கூறி வந்துள்ளாா்.
இந்நிலையில், வீட்டில் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவா் திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு புதன்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கே. கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.