திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூருக்கு வந்த தமிழக நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேருவிடம், பிளஸ் 1 மாணவா், தனது சேமிப்புத் தொகையை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கினாா்.
மண்ணச்சநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் திருப்பைஞ்ஞீலியை சோ்ந்த மாணவா் கெளதம், தன்னுடைய படிப்புக்காக சேமித்து வைத்திருந்த ரூ.1,556ஐ மண்ணச்சநல்லூருக்கு புதன்கிழமை வந்த தமிழக நகா்ப்புற மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என். நேருவிடம் வழங்கினாா். இதேபோல் திருப்பைஞ்ஞீலியைச் சோ்ந்த கூலித்தொழிலாளியான மாற்றுத்திறனாளி கனகராஜ் என்பவா் நிவாரண நிதியாக அமைச்சரிடம் ரூ.1,000 வழங்கினாா். நிதியை பெற்றுக் கொண்ட அமைச்சா் கே.என். நேரு, மாணவா் மற்றும் மாற்றுத்திறனாளியின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தாா்.