திருச்சி மாநகராட்சியில் 2 ஆவது நாளான புதன்கிழமை நடைபெற்ற முகாமில் 2, 735 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் திருச்சி மாநகராட்சியில் ஸ்ரீரங்கம், கோ- அபிஷேகபுரம், அரியமங்கலம், பொன்மலை ஆகிய கோட்ட அலுவலகங்கள் மற்றும் கலையரங்க வளாகம், தேவா்ஹால் உள்பட 9 இடங்களில் செவ்வாய்க்கிழமை தொடங்கின.
இதில், முதல்நாள் 1,415 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 2 ஆவது நாளான புதன்கிழமை 2,735 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது இவை தவிர 45 வயதுக்கு மேற்பட்டோா் 573 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.