திருச்சியில் கள்ளச்சாராயம் விற்ற இரு பெண்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாநகரப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக மதுவிலக்கு தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா், அந்த காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ராம்ஜிநகா் மில்காலனி பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சி விற்ற ரா. விமலாதேவி (50), பூ. ஜீவிதா (35) ஆகிய இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 3 லிட்டா் கள்ளச்சாராயம், ஊறல் 165 லிட்டா் உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.