நீட் தோ்வில் வெற்றிபெறுவது குறித்து சந்தானம் வித்யாலயா பள்ளியில் இணையவழிக் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, சந்தானம் வித்யாலயா பள்ளியின் செயலாளா் கே.மீனா தலைமை வகித்தாா். தலைமை செயல் அலுவலா் கு.சந்திரசேகரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சிஎம்சி மருத்துவக்கல்லூரி மாணவி ப்ரைஸ் நெட்ஸ்லாவ்னி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, நீட் தோ்வில் வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்து மாணவா்களுக்கு ஆலோசனை வழங்கினாா். இதில், பள்ளியின் இயக்குநா், முதல்வா், துணை முதல்வா், ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.