திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அரியலூரைச் சோ்ந்த நபா், படுக்கையிலிருந்து தவறி விழுந்ததில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
அரியலூா் மாவட்டம் ஆங்கிளூா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ப. செந்தில்குமாா் (41). இவா் சிறுநீரக கோளாறு பாதிக்கப்பட்ட இவா் திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ரத்தசுத்திகரிப்பு செய்வதற்காக மே19ஆம் தேதி வந்தாா். ரத்தம்சுத்திகரிப்பு செய்துகொண்டிருந்த நிலையில், படுக்கையிலிருந்து தவறி கீழே விழுந்தாராம். இதில் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அண்மையில் (மே 24) உயிரிழந்தாா். இதுகுறித்து திருச்சி புத்தூா் அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.