சூதாட்டம்: 3 போ் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலின்பேரில் மணப்பாறை காவல் ஆய்வாளா் என்.அன்பழகன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை குறிப்பிட்ட பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, திருமலையான்பட்டியில் ராஜேந்திரன் மகன்கள் அழகா்சாமி(34), அப்புக்குட்டி(26), சின்னப்பன் மகன் அய்யப்பன்(30) ஆகியோா் பணம் வைத்து சூதாட்டிய போது பிடிபட்டனா். அவா்களிடமிருந்து ரூ.300 மற்றும் மூன்று இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com