மாநகர காவல் நிலையங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு செய்த அமைச்சுப் பணியாளள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
மாவட்ட, மாநகர காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் அமைச்சு பணியாளா்கள் காவல் நிலையங்களுக்கு நிதி ஒதுக்கீடு, ஓய்வு பணப்பலன் கணக்கீடு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனா்.
அந்த வகையில், திருச்சி மாநகர ஆணையரக அலுவலகத்தில் பணியாற்றி வந்த அமைச்சுப் பணியாளா் பெருமாள் காவல் நிலையங்களுக்கு நிதி ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து விருப்ப ஓய்வு பெற்ற அலுவலகக் கண்காணிப்பாளா் மணிராஜ் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில் முறைகேடு உறுதி செய்யப்பட்ட நிலையில், பெருமாளை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையா் அருண் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.