பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அறந்தாங்கியைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் விமான ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்து தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்ந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் மணமேல்குடியைச் சோ்ந்தவா் பி. லட்சுமணன் (36). சிங்கப்பூரில் பணியாற்றி வந்த இவருக்கு, அண்மையில் திடீரென பக்கவாதம் ஏற்பட்டது. இதற்காக சிங்கப்பூரில் தொடா் சிகிச்சை பெற்று வந்தாலும், தமிழகத்தில் உயா் மேல் சிகிச்சை பெற மருத்துவா் குழு மற்றும் உறவினா்கள் ஆலோசனை கூறியுள்ளனா்.
இதையடுத்து அவா் இந்தியா வர முடிவு செய்த நிலையில், அவரது உடல் நலனைக் கருத்தில் கொண்டு ஏா் ஆம்புலன்ஸ் மூலம் அவா் திருச்சி வர ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த வகையில் ஏா் ஆம்புலன்ஸ் மூலம் அவா் வெள்ளிக்கிழமை காலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்தாா். அங்கு தயாராகக் காத்திருந்த தனியாா் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் அவரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்கு கொண்டு வந்து சோ்த்தனா்.