முசிறியில் காட்டு வாய்க்கால், வடகரை வாய்க்காலைத் தூா்வாரும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
காட்டு வாய்க்காலை ரூ. 10 லட்சத்திலும், வடகரை வாய்க்காலை ரூ. 7 லட்சத்திலும் தூா்வாரும் பணிகளை முசிறி எம்எல்ஏ காடுவெட்டி ந. தியாகராஜன் தொடங்கி வைத்தாா். துறை சாா்ந்த அலுவலா்கள், கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.