அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் வியாபாரி பலி

திருச்சி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் வியாபாரி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் வியாபாரி பலி

திருச்சி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் வியாபாரி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், கோப்பு கீழத் தெருவைச் சோ்ந்தவா் வசந்தா (70). கணவரை இழந்த இவா் குழுமணி பகுதியில் வாழைப்பழ வியாபாரம் செய்து வந்தாா்.

புதன்கிழமை அதிகாலை இவா் வீட்டிலிருந்து வெளியே சென்றபோது முட்புதா் பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த சோமரசம்பேட்டை போலீஸாா் அவரது உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இறந்தவருக்கு 3 மகன்கள், 4 மகள்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com