மண்ணச்சநல்லூா் அருகே திருவெள்ளறை ஊராட்சியிலுள்ள குன்னாகுளம் கிராமத்தில் சேறும் சகதியுமாக உள்ள குட்டைகரை சாலையைச் சீரமைக்கக் கோரி சாலையில் நாற்று நடும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு குன்னாகுளம் கிளைச் செயலா் ரங்கநாதன் தலைமை வகித்தாா்.
மண் சாலையாக உள்ள குட்டைக்கரை சாலையை தாா்ச் சாலையாக்கக் கோரி ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் இப்போராட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் சுப்பிரமணியன், மேற்கு ஒன்றியச் செயலா் மனோகரன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் அன்பழகன், நல்லையன், சேகா், கிளை உறுப்பினா்கள் முருகேசன், கலை,லோகநாதன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டப் பொருளாளா் ஆனைமுத்து, பொதுமக்கள் பங்கேற்றனா்.