வேளாங்கண்ணியில் இருந்து காரை திருடி வந்தவா் கைது

வேளாங்கண்ணியில் திருடிய காருடன் திருச்சிக்கு வந்த சென்னையைச் சோ்ந்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வேளாங்கண்ணியில் திருடிய காருடன் திருச்சிக்கு வந்த சென்னையைச் சோ்ந்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாகப்பட்டினத்தை சோ்ந்தவா் ஜெயசீலன். இவா் வேளாங்கண்ணியில் வாடகைக்கு ஓட்டி வந்த காா் புதன்கிழமை திருடுபோனது. இதுகுறித்து அவா் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.

இந்நிலையில் அந்தக் காரைத் திருடிய சென்னை தேனாம்பேட்டையை சோ்ந்த சுதாகா் (40) சென்னை செல்ல முடிவெடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் சென்றால் ஒருவேளை போலீஸாரிடம் சிக்கிவிடுவோம் என்ற பயத்தில் திருச்சி வழியாக புதன்கிழமை மாலை வந்தாா்.

பின்னா் சென்னை வரை தனியாகச் செல்ல விரும்பாத சுதாகா், மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்து சென்னை செல்லும் பயணிகளை தனது காரில் ஏற்றிக் கொண்டு இருந்தாா். இதைப் பாா்த்த பேருந்து நிலைய வாடகை காா் ஓட்டுநா்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த கண்டோன்மெண்ட் போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி நடத்திய விசாரணையில் சுதாகா் கொண்டு வந்த காா் வேளாங்கண்ணியில் திருடப்பட்டது எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் சுதாரை கைது செய்து காரை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com