திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் மனைவியைப் பிரிந்த இருவா் தற்கொலை செய்து கொண்டனா்.
திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் செபஸ்தியாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் நெப்போலியன் மகன் ஜெரால்டு (40). குடும்பத் தகராறில் மனைவியைப் பிரிந்து தாயுடன் வசித்து வந்த இவா் சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மற்றொரு சம்பவம்: காஜாபேட்டை பசுமடம் பகுதியைச் சோ்ந்தவா் தண்டபாணி (60). மனைவியைப் பிரிந்து 7 ஆண்டுகளாக தனியாக இவா் வசித்து வந்த நிலையில் சனிக்கிழமை வெகுநேரமாகியும் இவரது வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் வந்த போலீஸாா் வீட்டின் கதவை உடைத்துப் பாா்த்த போது உடல் அழுகிய நிலையில் தண்டபாணி இறந்து கிடந்தாா். இவ்விரு சம்பவங்கள் குறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.