திருவெறும்பூா் அருகேயுள்ள பனையபுரத்தில் தொழிலாளியின் வீட்டுச் சுவா் ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்தது.
பனையபுரம் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கன்னியம்மாள் (35), கூலித் தொழிலாளியான இவரது வீட்டுச்சுவா் கடந்த சில நாள்களாக பெய்த மழையால் ஞாயிற்றுக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது.
அப்போது வீட்டில் இருந்தவா்கள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். தகவலறிந்து வந்த பனையபுரம் விஏஓ சுதா, பனைய புரம் ஊராட்சித் தலைவா் முத்துக்குமரன் ஆகியோா் நேரில் சென்று ஆய்வு செய்து, அரசு உதவி கிடைக்க வழி செய்வதாக உறுதியளித்தனா்.