விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
காட்டுப்புத்தூா் அருகேயுள்ள சோ்வைகாரன்பட்டியைச் சோ்ந்தவா் முத்துசாமி மனைவி பரமேஸ்வரி (49). இவா் உடையாகுளம்புதூருக்கு கடந்த நவ.15 ஆம் தேதி சென்றுவிட்டு தனது சகோதரா் ராஜகோபால் ஓட்டிவந்த பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து, பலத்த காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இந்நிலையில் அவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தாா். புகாரின்பேரில் காட்டுப்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.