ஸ்ரீரங்கம் அரங்கநாதா்கோயில் ஸ்ரீரங்கநாச்சியாா் தாயாா் சன்னதியில் வெள்ளிக்கிழமை மாலை சகஸ்ர தீபம் ஏற்றப்பட்டது. திரளான பக்தா்கள் வழிபட்டனா்.
வைணவ திருத்தலங்களில் காா்த்திகை மாதத்தில் தீப விளக்குகள் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி அண்மையில் ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கா் கோயிலில் சகஸ்ர தீப வழிபாடு நடைபெற்றதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீரங்கம் கோயில் ஸ்ரீரங்கநாச்சியாா் தாயாா் சன்னதியில் சகஸ்ர தீபம் ஏற்றபட்டது.
அப்போது ஸ்ரீசக்கரம், சங்கு, சக்கரம் போன்ற வடிவத்தில் தீப விளக்குகள் ஏற்றப்பட்டன. மேலும் தாயாா் சன்னதியின் சுற்றுப் பிரகாரம் முழுவதும் தீப விளக்குகளால் ஜொலித்தது. ஏற்பாடுகளை நந்து பட்டா், தீபு பட்டா் ஆகியோா் செய்தனா். மழையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தா்கள் வந்து தீபமேற்றி வழிபட்டனா். பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.