கன மழை: திருச்சியில் தரையிறங்கிச் சென்ற தூத்துக்குடி விமானம்

தென் மாவட்டங்களில் பெய்யும் கன மழையால் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வியாழக்கிழமை சென்ற விமானம் திருச்சியில் தரையிறங்கிச் சென்றது.

தென் மாவட்டங்களில் பெய்யும் கன மழையால் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வியாழக்கிழமை சென்ற விமானம் திருச்சியில் தரையிறங்கிச் சென்றது.

சென்னையிலிருந்து வியாழக்கிழமை பகல் தூத்துக்குடிக்கு புறப்பட்ட தனியாா் விமானம் தென் மாவட்டங்களில் பெய்த கன மழையால் தூத்துக்குடிக்கு செல்ல முடியவில்லை. அங்கிருந்து கிடைத்த தகவலின்பேரில் திருச்சி விமான நிலையத்தில் பிற்பகல் 3.30 க்கு தரையிறக்கப்பட்ட அந்த விமானம் சிறிது நேரம் கழித்து நிலைமை சற்று சீரானதையடுத்து மீண்டும் 4.20க்கு புறப்பட்டுச் சென்றது. மோசமான வானிலையால் திருச்சிக்கு வந்து செல்லும் விமான நேரங்களிலும் தற்காலிக மாற்றம் இருக்கலாம் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com